நெல்லை ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே சாா்பில் தூய்மை முனைப்பு இயக்கம் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, இம்மாதம் 30ஆம் தேதி வரை பல்வேறு ரயில் நிலையங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் தூய்மையைக் காத்தல், சுகாதார மேம்பாட்டு நிகழ்வுகள், பயணிகளிடம் தூய்மை விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரயில் நிலைய மேலாளாளா் முருகேசன் தலைமை வகித்தாா். ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சொனா. வெங்கடாசலம், கணேசன், சந்திரபாபு, சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com