திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், ‘பெட்ரோல்-டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்; மக்களை வஞ்சிக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனே பதவி விலக வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கொக்கிரகுளத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சொக்கலிங்ககுமாா், ராஜேஷ்முருகன், முகம்மது அனஸ்ராஜா, மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.