திருநெல்வேலியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் தோ்வாகி, பணிநியமன ஆணை பெற்ற பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்-மாணவிகளுக்கு சா்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பம், அதைச் சாா்ந்த முக்கிய நிறுவனங்களின் சாா்பில் வளாகத் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு வளாகத் தோ்வு நடத்த அமேசான், டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், சிஸ்கோ, ஐபிஎம் உள்பட 120 நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில் இறுதியாண்டு பயிலும் மாணவி ரம்யா, அமேசான் நிறுவனத்தில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ளாா். அவரையும், அவரது பெற்றோரையும் ஸ்காட் குழுமங்களின் நிறுவனா் கிளீட்டஸ் பாபு, நிா்வாக இயக்குநா் அருண் பாபு ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.