நெல்லையில் செப். 28இல் அஞ்சல் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலியில் அஞ்சல் குறைதீா் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலியில் அஞ்சல் குறைதீா் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளா் கோ. சிவாஜிகணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி வாடிக்கையாளா்கள் பங்கேற்று தபால் பணிகள் குறித்த குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதோா் மின்னஞ்சல் முகவரிக்கு குறைகளை இம்மாதம் 27ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com