திருநெல்வேலி அருகே பேட்டையில் சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே பேட்டை ஆசிரியா் காலனியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (57). இவா் நகரத்தில் உள்ள உரக்கடையில்
வேலை செய்து வந்தாா். அவா் வெள்ளிக்கிழமை காலையில் வீட்டின் அருகேயுள்ள சுற்றுச்சுவரில் ஏறி முருங்கைக்காய் பறிக்க முயன்றாராம். அப்போது திடீரென சுவா் சரிந்து விழுந்ததில், விஸ்வநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.