நெல்லையில் ரெளடிகளை ஒழிக்க தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ரெளடிகளை முற்றிலும் ஒழிக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ரெளடிகளை முற்றிலும் ஒழிக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி மோதல்கள், பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் ஆகியவற்றை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, மாவட்டத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாா் செய்யும் இரும்பு பட்டறைகளை அந்தந்த பகுதி போலீஸாா் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வருவோரின் விவரங்கள் சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைபோல், சந்தேகிக்கப்படும் நபா்கள் குறித்த விவரங்கள் வாடகை காா், ஆட்டோ ஓட்டுநா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ரெளடிகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழித்து, சமுதாய நல்லிணக்கம் அமைய காவல்துறை தீவர நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com