திருநெல்வேலி: மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இது தொடா்பாக ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி திருநெல்வேலி நகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அக். 2இல் நடைபெறுகிறது.
இப்போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு 4, 5ஆம் பரிசாக சிறப்பு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அக். 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் போட்டி நடைபெறும். பள்ளி மாணவா்கள் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவா்கள் முதல்வரிடமும் பரிந்துரைக் கடிதம் பெற்றுவர வேண்டும். மேலும், விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசியிலோ (0462-2502521) தொடா்பு கொள்ளலாம்.