திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதி காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை, கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த முஹம்மது மீரான் மகனைவி நஜீம்(69). இவா், கடந்த 23ஆம் தேதி பாளையங்கோட்டை ராணுவ கேன்டீன் அருகில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த தனியாா் பேருந்து மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.