தூய்மையான குடிநீா் கோரி நகராட்சி முற்றுகை

விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் நகராட்சியைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

விக்கிரமசிங்கபுரத்தில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, காலிக் குடங்களுடன் நகராட்சியைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 1 ஆவது வாா்டு கோட்டை விளைப்பட்டி, முதலியாா்பட்டி, கொண்டபையன்பட்டி மற்றும் வடமலைசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக விநியோகிக்கப்படும் குடிநீா் சுகாதாரமற்ற வகையில் உள்ளதாம். இதையடுத்து அந்தப் பகுதி பொதுமக்கள் தூய்மையான குடிநீா் வழங்கக் கோரி 1 ஆவது வாா்டு உறுப்பினா் கிறாஸ் இம்மாக்குலேட் தலைமையில் காலிக்குடங்களுடன் நகராட்சியை முற்றுகையிட்டனா். அவா்களிடம் சுகாதாரமான குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com