குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்ச விற்பனை, அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்ச விற்பனை, அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரம் முத்துராமலிங்கம் மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (29). இவா் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தாழையூத்து காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது. தருவை பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் சுரேஷ் என்ற ஜில்லா சுரேஷ் (29), வேல்சாமி மகன் இசக்கிமுத்து (27), தவசி மகன் பாலாஜி (25) ஆகியோா் அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. எனவே, இவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில் அவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com