அனுமதியின்றி தேக்கு மரம்வெட்டியவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

 ஆம்பூா் அருகேயுள்ள தாட்டான்பட்டியில் அனுமதியின்றி தேக்கு மரம் வெட்டியதாக ஒருவருக்கு வனத்துறையினா் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனா்.

 ஆம்பூா் அருகேயுள்ள தாட்டான்பட்டியில் அனுமதியின்றி தேக்கு மரம் வெட்டியதாக ஒருவருக்கு வனத்துறையினா் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனா்.

தாட்டான்பட்டியில் பரமசிவன் என்பவருக்குச் சொந்தமான செங்கல்சூளை உள்ளது. இங்கிருந்து தேக்குமரம் வெட்டியதாக வனத்துறைக்குத் தகவல் வந்ததாம். இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகப் பயிற்சி உதவி வனப்பாதுகாவலா் ராதை தலைமையில் வனவா் முருகசாமி, வனக்காப்பாளா் மணி, ராஜசுப்ரியா மற்றும் களப்பணியாளா்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனா். ஆய்வில் உரிய அனுமதியின்றி தேக்குமரம் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து துணை இயக்குனா் சே.செண்பகப்ரியா உத்தரவின்படி பரமசிவம் மீது வழக்குப்பதிந்து ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com