புகையிலைப் பொருள்கள்பறிமுதல்: 5 போ் கைது

திருநெல்வேலி மாநகரில் தடை செய்யப்பட்ட 3 கிலோ 40 கிராம் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களுடன் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரில் தடை செய்யப்பட்ட 3 கிலோ 40 கிராம் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களுடன் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா மற்றும் விதிமுறை மீறி மது விற்கப்படுவதை தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அதன்படி, மாநகர எல்லைக்குள்பட்ட பகுதியில் அந்தந்த காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அதில், அரசால் தடைசெய்யப்பட்ட 3.40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மேலப்பாளையம் ஹாமீம்புரத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது (32), மேலப்பாளையம் நாச்சியாா் காலனி சுடலைமணி (55), தச்சநல்லூா் வடக்கு சிதம்பராநகா் ராஜேஸ்வரி (58), பேட்டை அபுதாகிா் (46), அபுல் பக்கீா் (44) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com