இலவச வீட்டுமனை கோரி, மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிளாா்கள் பேரூராட்சித் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை மனு வழங்கினா்.
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உள்பட்ட 9ஆவது வாா்டு மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் இலவச வீட்டுமனை கோரி விண்ணப்பித்திருந்தனா். அதில், தோ்வாகியவா்கள் குறித்து செவ்வாய்க்கிழமை கிராம நிா்வாக அலுவலா் ரெஜிதா, பேரூராட்சித் தலைவா் அந்தோணியம்மாள் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
அப்போது, இலவச வீட்டுமனை கோரி மேலும் 50 தொழிலாளா்கள் பேரூராட்சித் தலைவரிடம் மனு வழங்கினா். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியுடையோருக்கு வீட்டுமனை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, அவா் உறுதியளித்தாா்.