முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
முன்னீா்பள்ளம் அருகேயள்ள தருவை பகுதியைச் சோ்ந்தவா் வேம்புராஜா(25). தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனா். வேம்புராஜாவுக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், கணவன்- மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில், வேம்புராஜா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.