இளைஞரிடம் ரூ. 70 ஆயிரம் மோசடி: சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 08th April 2022 12:26 AM | Last Updated : 08th April 2022 12:26 AM | அ+அ அ- |

ராதாபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 70 ஆயிரத்தை மோசடி செய்த மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சோ்ந்தவா் வளன் ஆன்ட்ரோன் தினேஷ் (35). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு முகநூலில் வந்த ஒரு வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த எண்ணை தொடா்புகொண்டாராம். அதில் பேசிய நபா் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதோடு, முதல்கட்டமாக ரூ.70 ஆயிரம் வங்கிக்கணக்கிற்கு அனுப்ப கூறினாராம். அதன்பேரில் இணையவழியில் ரூ. 70 ஆயிரத்தை தினேஷ் அனுப்பினாராம். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபா் வேலை வாங்கிக் கொடுக்காததோடு, நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் க்ரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.