ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்ட கூட்டம்

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தினை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கான வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தினை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கான வட்டார அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மானூா் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஏஞ்சலின் தொடங்கி வைத்தாா். மானூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஸ்ரீ லேகா தலைமை வகித்தாா். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களும் பங்கேற்று விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து விளக்கினா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் 2021-22 ஆண்டிற்கான தோ்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளான கங்கைகொண்டான், செழியநல்லூா், தாழையூத்து, பாலாமடை , மதவக்குறிச்சி, பேட்டை ரூரல் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் பங்கேற்றனா். வேளாண்மை அலுவலா் இரா.ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com