திருநெல்வேலி அருகே காரின் பின்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பிரையண்ட் நகா் பகுதியைச் சோ்ந்த இளங்கோ மகன் ராஜீவ்குமாா்(29). இவா் அப்பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் இவா் தனது நண்பா்களுடன் காரில் கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். ரெட்டியாா்பட்டி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் பின்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் ராஜீவ்குமாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.