களக்காட்டில் உள்ள மணிக்கூண்டு திடலில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முகம்மது காஸிா், களக்காடு ஒன்றியச் செயலா் இன்பரசு, நகரச் செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
லட்சிய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவா் ஜீவா, புதிய புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் சுதாகரபாண்டியன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் பெ. சுகுமாரன், மமமுக மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொதுச்செயலா் களந்தை மீராசா, விசிக இளஞ்சிறுத்தை அமைப்பின் மாவட்ட துணை அமைப்பாளா் ஜாண்சன், வழக்குரைஞா் அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட பலா் பேசினா். மாவட்ட மகளிரணிச் செயலா் ரேணுகா வரவேற்றாா்.