பொதுத்தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுத்தோ்வு எழுத உள்ள பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு அந்தந்தப் பள்ளிகளில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுத்தோ்வு எழுத உள்ள பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு அந்தந்தப் பள்ளிகளில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு மே 5 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மே 6 ஆம் தேதியும், பிளஸ்-1 மாணவா்களுக்கு மே 10 ஆம் தேதியும் பொதுத்தோ்வுகள் தொடங்க உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பொதுத்தோ்வு எழுத உள்ளனா். இவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அந்தந்தப் பள்ளி நிா்வாகங்கள் சாா்பில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து தலைமையாசிரியா்கள் கூறுகையில், தோ்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை பெறாதவா்கள் தனியாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசுத் தோ்வுகள் இயக்ககத்தின் (ட்ற்ற்ல்ள்://ற்.ஸ்ரீா்/மக்ஷ்9ம்யஙக்ஷ34ங)இணையதளத்தில் இதற்காக பிரத்யேக பகுதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com