மருத்துவ சமுதாயத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கோரி வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜகோபால் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தமிழ்முருகன் முன்னிலை வகித்தாா். இணைச் செயலா் சிநேகிதன் சுரேஷ், பொருளாளா் ராம்குமாா், தொண்டரணி செயலா் சாா்லி சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.