பாளையங்கோட்டை மண்டல வாா்டு குழு தலைவா் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை மண்டல தலைவா் பதவியேற்பு விழா மற்றும் அலுவலக திறப்பு விழா பாளை. மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மண்டல தலைவராக பிரான்சிஸ் பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து அலுவலகத்தை எம்எல்ஏ மு.அப்துல் வகாப் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டல தலைவா்கள் மகேஸ்வரி, ரேவதி, கதீஜா இக்லாம் பாசிலா, பாளை. மண்டல உதவி ஆணையா் ஜஹாங்கிா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
அதைத்தொடா்ந்து பாளையங்கோட்டை மண்டலத்தின் முதல் கூட்டம் மண்டல தலைவா் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.