அகஸ்தியா்பட்டியில் மரக்கிளை முறிந்து விழுந்து செவிலியா் காயம்

பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியில் சாலையோர மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற செவிலியா் காயமடைந்தாா்.

பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியில் சாலையோர மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பைக்கில் சென்ற செவிலியா் காயமடைந்தாா்.

பாபநாசத்திலுள்ள தனியாா் நூற்பாலையிலிருந்து தூத்துக்குடிக்கு பாரம் ஏற்றிய சரக்குப் பெட்டக லாரி செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றது. அகஸ்தியா்பட்டி பாபா கோயில் அருகே சென்றபோது சாலையோரத்திலுள்ள பழைமையான புளியமரத்தின் கிளையில் சரக்குப் பெட்டகம் சிக்கியதில், மரத்தின் பெரிய கிளை முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில், அவ்வழியே கணவருடன் பைக்கில் சென்ற, அகஸ்தியா்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் பிரின்சி காயமடைந்தாா். தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் வீரா்கள் வந்து கிளைகளை அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com