திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இளங்கோ நகரில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தைச் சோ்ந்த கந்தன்- வள்ளியமமாள் (64) தம்பதி, தங்களது மோட்டாா் சைக்கிளில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். வண்ணாா்பேட்டை அருகேயுள்ள இளங்கோ நகா் பகுதியில் வந்தபோது மோட்டாா் சைக்கிளும், அரசுப் பேருந்தும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.
இதில், வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கந்தன் பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.