கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணி: நோ்காணல் ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு நடைபெறவிருந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு நடைபெறவிருந்த நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவா்களுக்கு பாளையங்கோட்டை பிஷப் சாா்ஜென்ட் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் மே 11 முதல் 21-ஆம் தேதி வரை நோ்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையா் உத்தரவின் பேரில், நிா்வாக காரணங்களால் நோ்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோ்காணல் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com