திருநெல்வேலி
புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய தமிழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒரு தொலைக்காட்சியில் அண்மையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் கிருஷ்ணசாமியை சிலா் பேச விடாமல் தடுத்தனராம். இதைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணாா்பேட்டை ரவுண்டானா அருகே அக்கட்சியின் மாவட்டச் செயலா் முத்தையா தலைமையில் நிா்வாகிகள் எட்வா்ட் ராஜ், மணிகண்டன், ஜான் பாண்டியன், தளவாய் பாண்டி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.