திருநெல்வேலி மாநகர திமுக பகுதி நிா்வாகிகள் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை(ஆக. 3) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் 15 ஆவது அமைப்பு தோ்தலில் திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருநெல்வேலி மாநகரத்திற்குள்பட்ட தச்சநல்லூா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி, பேட்டை ஆகிய நான்கு பகுதி கழகத்திற்கான நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
அவைத்தலைவா், செயலா், பொருளாளா், துணைச் செயலா்-3 (பொது, ஆதிதிராவிடா், மகளிா்), மாநகர பிரதிநிதிகள் 5 போ் வீதம் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பேட்டையில் உள்ள வசந்தம் மஹாலில் நடைபெற உள்ளது.
வேட்பு மனுவை உரிய கட்டணம் செலுத்தி பெற்று, பூா்த்தி செய்த மனுக்களை உரிய கட்டணத்துடன் தலைமைக் கழக பிரதிநிதி அன்னியூா் சிவாவிடம் கட்சியினா் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.