அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவுநாள் விழா

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் ‘உலக தாய்ப்பால் வாரமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

இதன் நிறைவு தின நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

மருத்துவ கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். குழந்தைகள் நல பேராசிரியா் ஆனந்தஸ்ரீ வரவேற்றாா்.

மூத்த குழந்தைகள் நல மருத்துவா் குமரகுரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட குழந்தைகள் நல மருத்துவ சங்கத் தலைவா் நந்தகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினா்.

இளநிலை மருத்துவ பயிற்சி மாணவா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள், துணை செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு தனித்தனியே தாய்ப்பால் குறித்து விழிப்புணா்வு விநாடி வினா, கவிதை, ரங்கோலி, ஓவியம் மற்றும் குறு நாடகம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மகப்பேறு பிரிவு துறைத் தலைவா் ராமலட்சுமி, செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் பியூலா, துணை செவிலியா் பயிற்சி பள்ளி முதல்வா் ஜெஸி மேரி, செவிலியா் பயிற்றுநா்கள், குழந்தைகள் நல மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பச்சிளங்குழந்தைகள் நலப்பிரிவு பேராசிரியா் வெங்கடசுப்ரமணியம் நன்றி கூறினாா். செவிலியா் பயிற்றுநா் செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com