நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை கல்லூரி முதல்வா் மைதிலி தொடங்கி வைத்தாா். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு காந்திநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. தேசிய மாணவா் படை பொறுப்பாசிரியா் சுசீலா தலைமையில்அணிவகுப்பு நடைபெற்றது.