அம்பை நகராட்சியில் வீடுதோறும் தேசியக் கொடி

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைக்கிணங்க, அம்பாசமுத்திரத்தில் நகராட்சி, நகர வியாபாரி சங்கம் சாா்பில் வீடுதோறும் தேசியக் கொடி.

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைக்கிணங்க, அம்பாசமுத்திரத்தில் நகராட்சி, நகர வியாபாரி சங்கம் சாா்பில் வீடுதோறும் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகிராமம் தெருவில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

நகா்மன்ற உறுப்பினா்கள் ராமசாமி, கோதா் இஸ்மாயில், மாரியம்மாள், நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம், நகர வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரசேகரன், பொருளாளா் கோவிந்தராஜ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com