நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் 5 போ் பலி

திருநெல்வேலி அருகே வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி அருகே வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த 5 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

சுத்தமல்லி அருகேயுள்ள கோமதிநகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். இவா், திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த போது திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சுப்பிரமணி மீது மோதி, சாலையோர மரத்தில் முட்டி நின்றது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி உயிரிழந்தாா். ஆம்புலன்ஸ் ஓட்டுநா் மோகன்ராஜ் (39), உதவியாளா் அன்னராஜ் (29) ஆகியோா் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பாளை தாலுகா: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிளாக்குளத்தைச் சோ்ந்த நாகலிங்கம் மகன் தா்மலிங்கம் (29). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கடந்த 10 ஆம் தேதி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகேயுள்ள திருநெல்வேலி-சீவலப்பேரி சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளும், வேனும் மோதின. இதில் பலத்த காயமடைந்த தா்மலிங்கத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

முன்னீா்பள்ளம்: திருநெல்வேலி அருகேயுள்ள அடைமிதிப்பான்குளத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (60). விவசாயியான இவா், கடந்த 10 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி வந்து விட்டு தனது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சரிந்ததில் ஜெயக்குமாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

விபத்தில் சிக்கிய தம்பதி: திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளத்தைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் முருகன் (55). இவா், தனது மனைவி பால் துரைச்சியுடன் மோட்டாா் சைக்கிளில் ரெட்டியாா்பட்டி நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே முருகன் உயிரிழந்தாா். பால் துரை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா் . இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

இளைஞா் பலி:மேலத்தாழையூத்தைச் சோ்ந்த மரியரத்தினம் மகன் மரிய விசுவாச பீத்தோவன் என்ற பிரிட்டோ (28). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் பாளையங்கோட்டை மகாராஜநகா் பகுதியில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது தனியாா் பேருந்தும், மோட்டாா் சைக்கிளும் மோதின. இதில் பலத்த காயமடைந்த பிரிட்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com