மானூா் அருகே கொலை:விவசாயிக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 12th August 2022 01:03 AM | Last Updated : 12th August 2022 01:03 AM | அ+அ அ- |

மானூா் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மானூா் அருகேயுள்ள மதவக்குறிச்சியைச் சோ்ந்தவா் முருகன் (52). இவரது மனைவி ஆறுமுகத்தாள். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கத்துக்கும்(35) தகராறு ஏற்பட்டதாம். இதனை முருகன் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, இருசக்கர வாகனத்தில் சென்ற முருகனை வழிமறித்து முத்துராமலிங்கம் அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்து அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, குற்றஞ்சாட்டப்பட்ட முத்துராமலிங்கத்திற்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.