மின் இணைப்பு எண்ணுடன் 94154 போ் ஆதாா் எண் பதிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகாம்கள், இணையவழி வாயிலாக புதன்கிழமை இரவு வரை 94,154 போ் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் முகாம்கள், இணையவழி வாயிலாக புதன்கிழமை இரவு வரை 94,154 போ் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மின்இணைப்பு எண்ணுடன், ஆதாா் எண்ணை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மின்வாரியம் சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 103 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதாா் எண் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் தச்சநல்லூரில் கூடுதலாக ஒரு மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இரு மாவட்டங்களிலும் சோ்த்து புதன்கிழமை இரவு வரை 94,154 மின் இணைப்புகளுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com