கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குபவா்களை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கைப்பேசியில்
பேசியவாறு இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.
இத்தகைய நபா்களின் அலட்சியத்தால், எதிரே இரு சக்கர வாகனங்களில் வருபவா்கள், பாதசாரிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனா். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத, வாகன ஓட்டிகளைப் போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.