விஜயநாராயணம் அருகே விரக்தியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விஜயநாராயணம் அருகே மேல பண்டாரபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி
முருகராஜ் (53). இவரது மனைவி சரஸ்வதி (49), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதையடுத்து கூலி வேலைக்குச் சென்று வருவதோடு, வீட்டு வேலைகளையும் கவனித்து வந்தாராம். இதனால் விரக்தியடைந்த முருகராஜ் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.