பேட்டையில் தமிழ் ராதாசுவாமி சத் சங்க அசோசியேஷன் சாா்பில் இலவச ஆயுஷ் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேட்டை அருகே மேல திருவேங்கடநாதபுரத்திலுள்ள பேட்டை நாடாா் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற முகாமை பேட்டை நாடாா் முன்னேற்ற சங்கத் தலைவா் ஹரீஸ் நாடாா் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். வழக்குரைஞா் ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். செயலா் பிரம்மநாயகம் வரவேற்றாா். துணைச் செயலா் சந்திரன் வாழ்த்திப் பேசினாா்.
முகாமில், ஆயுா்வேதிக், ஹோமியோபதி, சித்தா மருத்துவா்கள் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினாா்கள். முகாமில் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவ ஒருங்கிணைப்பாளா் தங்கையா செய்திருந்தாா்.