திருநெல்வேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட இரு விபத்துகளில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
பாளையங்கோட்டை என்ஜிஓ.ஏ காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜான் செல்வகுமாா் (67). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவா்,ஜெபா காா்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த காா் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகேயுள்ள காடன்குளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கி தாஸ் (18). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நண்பரான கண்ணன் மகன் முருகன் (16) என்பவரும் கங்கைகொண்டானை அடுத்த ராஜபதியில் மற்றொரு நண்பரை ஞாயிற்றுக்கிழமை பாா்த்துவிட்டு, ஊருக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தனராம்.
தாழையூத்து, குறிச்சி குளம் நான்குவழிச் சாலை பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பு சுவரில் மோதி கவிழந்தது. இதில் முருகன் சம்பவ இடத்திலும், இசக்கி தாஸ் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா்.
இச்சம்பவங்கள் குறித்து முறையே, திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு, தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.