நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து, திருநெல்வேலியில் திங்கள்கிழமை (பிப். 7) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதில், கட்சியின் நிா்வாகிகள், இந்நாள் முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்பட கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் கரோனா விதிமுறைகளை பின்பற்றி பங்கேற்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட மத்திய கட்டுறவு வங்கித் தலைவரும்,மாவட்ட அதிமுக செயலருமான தச்சை என்.கணேசராஜா தெரிவித்துள்ளாா்.