மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த காய்கனி வியாபாரி, திருநெல்வேலி நகரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் சந்தை பகுதியில் ஆண் ஒருவா் மயங்கிக்கிடந்தாராம். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
தச்சநல்லூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூா் பகுதியைச் சோ்ந்த காய்கனி வியாபாரி சுதீா் டிங்கு(50); திருநெல்வேலி நகரத்தில் உள்ள காய்கனி கடைக்கு அவா் உருளைக்கிழங்கு அனுப்பி வைத்ததற்கு உரிய பணம் வழங்கப்படாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா் எனத் தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.