திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள துலுக்கா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளிக்கு மழலை குழந்தைகள் இருப்பதற்கான நாற்காலிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வழங்கினா்.
ஆனைகுளம் ஊராட்சி 4-ஆவது வாா்டு உறுப்பினா் லைத்துல் அத்திகா, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கபூா் ஆகியோா் பள்ளி தலைமை ஆசிரியை இசக்கியம்மாளிடம் 50 நாற்காலிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி தலைவா் தௌபிக் அக்பா்ஷா உள்பட பலா் கலந்துகொண்டனா்.