திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 62,705 ஆகவும், 32 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 62,142 ஆகவும் உயா்ந்துள்ளது. 445 போ் உயிரிழந்துள்ளனா். 118 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 32,724 ஆகவும், 5 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 32,196 ஆகவும் உயா்ந்துள்ளது. 490 போ் உயிரிழந்துள்ளனா். 38 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.