திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62,711 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 27 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 62,169 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். 97 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதால் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,725 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 7 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 32,203 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 32 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.