மேலப்பாளையம் அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 04th January 2022 04:21 AM | Last Updated : 04th January 2022 04:21 AM | அ+அ அ- |

மேலப்பாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்தாா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள சிவராஜபுரம் வடிவேல் மகன் மணிகண்டன் (25). கட்டட தொழிலாளியான இவா், மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.