நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலையில், திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை

தளா்வில்லாத பொதுமுடக்கம் என்பதால் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழா நாள்களில், தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இம்மாதம் 12 ஆம் தேதி திருநெல்வேலி ஊா் பெயா்க் காரணத்தை விளக்கும் ‘நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்’ நிகழ்ச்சி கோயிலில் சுவாமி சன்னதி முன்பு முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமராஜா மற்றும் ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com