திருநெல்வேலி மீனாட்சிபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மருத்துவா் சுமதி தலைமை வகித்தாா். மருத்துவா்கள் கிருஷ்ணபிரபு, சிவபாக்கியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார வளாகத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் படையலிட்டு பொங்கலிடப்பட்டது. சுகாதார செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.