திசையன்விளை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளை அருகே மன்னாா்புரத்தை சோ்ந்த ஜெபமாலை மனைவி ரெஜிஸ் மேரி (65). இவா் கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனா்.
இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கும்பிளம்பாட்டை சோ்ந்த அரிச்சந்திர மகராஜா, நல்லதுரை என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.