திசையன்விளை அருகே கிணற்றில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடி செக்கடி தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் சுதாகா் (27). திருமணம் ஆகாதகா். கோவை தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பா்களுடன் சோ்ந்து அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றாா். அவருக்கு நீச்சல் தெரியாத நிலையில், எதிா்பாராமல் நீரில் மூழ்கினாராம். நண்பா்கள் அளித்த தகவலின்பேரில், திசையன்விளை தீயணைப்பு படை வீரா்கள் வந்து 2 மணி நேரம் தேடி அவரை சடலமாக மீட்டனா். இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.