தமிழ்நாடு ஊா்திக்கு அனுமதிமறுத்ததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th January 2022 02:01 AM | Last Updated : 18th January 2022 02:01 AM | அ+அ அ- |

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊா்தி இடம் அளிக்க மறுத்ததைக் கண்டித்து, திருநெல்வேலி சிந்துபூந்துறை பகுதியில் அனைத்துக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் படங்களின் இடம்பெறும். ஆனால், நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பில் இருந்து வ.உ.சிதம்பரனாா், வேலுநாச்சியாா், மகாகவி பாரதியாா் உள்ளிட்டோா் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊா்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதைக் கண்டித்தும், தமிழ்நாடு அலங்கார ஊா்தியை குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலா் நிஜாம், மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கா், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் தேவேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.