பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள் மாவட்ட காவல்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வுப் போட்டிகள் மாவட்ட காவல்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன.

சாலை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்த தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள 5 காவல் உள்கோட்ட தலைமையகத்தில் இப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு உதவி , துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் முன்னிலை வகித்தனா்.

இப்போட்டிகள், தாழையூத்து, நான்குனேரி, வள்ளியூா், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில், மாணவா்-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா். இதில், சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனா்.

மேலும் வரும் 8 ஆம் தேதி, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு குறித்து விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. விழிப்புணா்வு கண்காட்சி, கருத்தரங்கத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி - கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு அனைவரும் விழிப்புணா்வு பெறும் வகையில் விழிப்புணா்வு செயல்பாடுகளை அரங்கில் இடம் பெறச்செய்யவுள்ளனா் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com