மானூா் அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகப் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் களக்குடியை சோ்ந்த பால்சாமி (52) கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தாா். பின்னா் அவா், நீதிமன்றத்தில் விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததாா். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்படி மானூா் போலீஸாா் பால்சாமியை வியாழக்கிழமை கைது செய்தனா்.