பொதுமக்களிடம் விழிப்புணா்வு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு, காவல் ஆணையா் பாராட்டு தெரிவித்தாா்.
திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு சிறப்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தியது, சிறந்த விழிப்புணா்வு விடியோ வெளியிட்டது போன்ற பணிகளைப் பாராட்டி, திருநெல்வேலி மாநகர குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஜெகதாவுக்கு, சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவரை வியாழக்கிழமை நேரில் அழைத்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சியில் தலைமையிட காவல் துணை ஆணையா் அனிதா, நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் நாகசங்கா் ஆகியோா் பங்கேற்றனா்.